தமிழர் அரசியல் சூழலில் வரலாறு பற்றி பெரிய புரிதல் யாருக்கும் இல்லை. குறிப்பாக போலி வரலாறு பல கட்டமைக்கபட்டு தமிழர்களை நம்ப வைத்தனர். அதன் பொருட்டு வேளாளர்கள் நாயக்கர் காலத்தில் நிலம் பெற்றவர்கள் என்றும் ஆதீன நிலங்கள் அப்படி உருவானது தான் என்றும் கதைகட்டி விட்டனர். ஆனால் உண்மை என்னவென்றால் நாயக்கர்கள் ஒருபோதும் ஊர் நாட்டு பகுதிகளுக்குள் வந்ததே இல்லை. ஊர்நாட்டை ஆட்சிசெய்த வேளாளர்களிடமும் நகரத்தை ஆட்சி செய்த நகரத்தார்களிடமும் நாயக்கர்கள் என்றுமே நெருங்கியதில்லை என்பது தான் உண்மையான வரலாறு.
சித்திரமேழிப் பெரியநாட்டார் சபை வேளாளர்களை தலைமையாக கொண்டு சோழர்களால் உருவாக்கபட்ட அமைப்பு. இவ்வமைப்பு சோழநாடு, தொண்டைநாடு, கொங்குநாட்டு பகுதிகளில் அதிகாரம் படைத்த அமைப்பாக இயங்கியது. காடு திருத்தி நாடாக்கிய வேளாளர்கள் கட்டமைத்த ஊர்களில் நிலமேலாண்மை, நீர்மேலாண்மை மட்டுமல்லாது குடிமேலாண்மையையும் கட்டமைத்தார்கள். வேளாளர்களால் கட்டமைக்கபட்ட பதினெட்டு குடிகளையும் கொண்டுதான் ஊர்நாட்டார் நிர்வாகம் செயல்பட்டது.
விளைச்சல் நிலங்களை உருவாக்கி ஊர்களை பெருவளநாடுகளாக கட்டமைத்த பின்னர் கோவில்களுக்கு நிலங்களை கொடையாக வழங்கினர். சைவ மடங்களை கட்டமைத்து தமிழ் வளர்த்து கல்வியிலும் கலையிலும் அறம் சார்ந்த பல தொண்டுகளை புரிந்தது சித்திரமேழிப் பெரியநாட்டு சபை வேளாளர்கள் என்பது தான் வரலாறு. அதன் நீட்சியாக தான் இன்று ஆதீனங்கள் செயல்படுகிறது.
இத்தகைய நிலக்கிழார்களாக இருந்த வேளாள நாட்டார்கள் நாயக்கர்களிடமிருந்து நிலம் பெற்றார்கள் என்ற போலியான வரலாறுகளை பரப்புவது வேளாளர்களின் மீதான காழ்ப்புணர்வால் தான். குறிப்பாக தென்மாவட்டத்தில் இந்த சோழர்களின் கட்டமைப்பு பெரிதும் இல்லாததால் அவர்களுக்கு இந்த வரலாறு தெரிய வாய்ப்பில்லை.
நாகப்பட்டினம் முதல் கோவை வரையும் புதுக்கோட்டை முதல் நெல்லூர் வரையும் உள்ள சித்திரமேழி பெரியநாட்டு வேளாளர்களின் மடங்கள் பற்றியும் நாட்டார் கல்வெட்டுகளை பற்றியும் பேராசிரியர் சு.இராசவேலு தெளிவாக பதிவு செய்துள்ளார்.
- பார்கவன் சோழன்.
No comments:
Post a Comment