Tuesday, November 26, 2024

சபரிமலையில் அரசியல் செய்யும் நீலம் கும்பல் - கமலிகணேசன்...




தொடர்ந்து இந்து வழிபாட்டை கேள்வி கேட்கும்  பிற்போக்குவாதிகள் கிறிஸ்தவ இசுலாமிய வழிபாடு என்று வந்துவிட்டால் பகுத்தறிவு வேலை செய்யாது. 

ஏனெனலில் இந்து வழிபாடு மட்டுமே மூடநம்பிக்கை என்று இவர்கள் பரப்புரை செய்வதற்கு பின் ஒரு அரசியல் உண்டு. 

வெங்கட்பிரபுவிடம் உதவியாளராக பணிபுரிந்த பா.ரஞ்சித் அட்டகத்தி திரைப்படம் மூலம் அறிமுகமாகி மெட்ராஸ் படத்திற்கு பிறகு புகழ் பெறுகிறார். இந்த புகழ் வெளிச்சத்தில் நீலம் என்கிற ஒரு பண்பாட்டு மையத்தை உருவாக்குகிறார்கள். 

இவர்களின் இந்துமத வெறுப்பு மார்கழியில் மக்களிசை என்ற பெயரில் தொடங்கி தற்போது இசைவாணியின் ஐ எம் சாரி ஐயப்பாவில் வந்து நிற்கிறது. 

மார்கழியில் இந்து மத மரபினரான சைவர் திருவெம்பாவை படிப்பதும், வைணவர்கள் திருப்பாவை படித்து நோன்புகளை கடைப்பிடிப்பது வழக்கம். அந்த மாதத்தில் தான் எந்த பண்பாட்டு தொடர்பும் இல்லாத மார்கழியில் மக்களிசை என்று இந்துமத எதிர்ப்பை காட்ட போட்டிக்கு இதை தொடங்கினர். 

அதன் தொடர்ச்சிதான் இங்கு வந்து நிற்கிறது.
இதற்குபின் உள்ள அரசியலை ஒவ்வொரு இந்துக்களும் உணர வேண்டும்.

இவர்கள் தங்களை பெளத்தர்கள் என்று அடையாளபடுத்தி கொள்கிறார்கள். ஆனால் பெளத்த குருமார்களின் வழி பெளத்த மரபை இவர்கள் கடைப்பிடித்து நாம் பார்த்ததில்லை. 
இவர்கள் இந்த முகமூடிகளுக்குள் ஒளிந்து இருக்கும் கிரிப்டோ கிறிஸ்தவர்கள் என்பதை நாம் உணர வேண்டும். 

இவர்களின் தொடர்ச்சியான பரப்புரை என்னவென்றால் இந்து மதத்தில் சாதி ஏற்றதாழ்வு உண்டு பெண்ணடிமைத்தனம் உண்டு என்று பரப்புவார்கள். இதில் கவனிக்க வேண்டிய விசயம் இது ஒரு குறிப்பிட்ட மக்களை குறிவைத்து நடக்கும். 

ஆனால் இந்து மதத்தில் சிலரின் சுயநலத்திற்காக அதுபோன்று நடத்தபட்டிருக்கலாம். ஆனால் வாழ்வியலை பொறுத்தவரை இங்கு அனைவருக்கும் சம மரியாதை வழங்குவதை தான் நோக்கமாக கொண்டுள்ளோம். சோழநாட்டில் திருவாரூர் கோவிலில் யானை ஏறும் பெரும்பறையர் எனும் நிகழ்வு சிறப்பாக இன்றும் கொண்டாடபடுகிறது. அந்த நிகழ்வில் யார் சாதி பார்க்கிறார்கள். இதுதான் நமது வாழ்வியல். அதன்பிறகு பெண்ணடிமைத்தனம் என்கிறார்கள் பெண்ணை வீரத்தின் அடையாளமாக போற்றக்கூடிய மரபு நமது மரபு.  கொற்றவை வழிபாடு தமிழர்களின் வாழ்வியலில் போர்தெய்வ வழிபாடாக உள்ளது. இதுதான் நமது மரபில் பெண்களின் நிலை! 

ஆனால் இதை எல்லாம் மறைத்து இவர்கள் சில இடங்களை தேர்ந்தெடுத்து பிரச்சனையை துவக்கி ஒருசாரரை இவர்களின் ஆதரவாக மாற்றி எடுப்பது தான் இவர்களின் நோக்கம்.
அப்படி இவர்களின் வலையில் சிக்குபவர்கள் வெகுவிரைவாக கிறிஸ்தவர்களாக மாற்றபடுவார்கள்.

இதுபோன்ற பரப்புரைக்கு பின் நடக்கும் விசயங்கள் இதுவெல்லாம். 

சபரிமலை கோவிலை பொறுத்தவரை சாஸ்தா வழிபாடு அதற்கென சில விதிகள் உருவாக்கப்பட்டுள்ளது. அது அந்த வழிபாட்டின் மீது நம்பிக்கை உள்ளவர்கள் கடைப்பிடிக்கிறார்கள். நம்பிக்கையற்ற உங்களுக்கு அதில் என்ன பிரச்சனை? இல்லை அந்த விதிகளை மீறி செயல்படுவோம் என சொல்பவர்கள் முதலில் கிறிஸ்தவ இசுலாமிய விதிகளை மீறி புரட்சி செய்துவிட்டு வாருங்கள் அதன்பிறகு இதை பற்றி எல்லாம் பேசுவோம்.

இதுபோன்ற விதிகளும் கட்டுப்பாடுகளும் இந்து மதத்தில் மட்டுமே இருக்கிறது என்று கூறும் பரப்புரையே முதலில் அபத்தமானது.

இந்து மதம் என்ற பெயரில்  இங்கு பல்வேறு வழிபாட்டு நெறி உண்டு அவரவர் அவரவர் நெறியை அழகாக எந்த பிரச்சனையும் இல்லாமல் கடைபிடித்து தான் வருகின்றனர். 

ஆனால் இதுவெல்லாம் பிரச்சனையாக்குபவர்களின் அரசியலுக்கு பின் மிகப்பெரிய ஆயுதமாக சினிமா வெளிச்சமும் ஊடக அரசியலும் பக்கபலமாக இருக்கிறது. 

நமது உயரிய நாகரிகத்தையும் பண்பாட்டையும் சிதைத்து நம்மை அடிமைபடுத்துவதன்றி இதற்கு பின் வேறென்ன அரசியல் இருந்துவிட போகிறது.

இந்து மதத்தில் தாழ்ந்தவர் என்றோ உயர்ந்தவர் என்றோ யாரும் கிடையாது அப்படி எல்லாம் சிலர் கூற துவங்குகிற போதெல்லாம் சித்தர்களும் ஒளவையும் வைகுந்தர் வள்ளலார் போன்ற ஞானியர்கள் அதை கடுமையாக எதிர்த்தே வந்துள்ளனர். அதுவே இந்து மதம்.

நாம் இன்று மாபெரும் பண்பாட்டு புரட்சியை நோக்கி தள்ளப்படுகிறோம்...

- கமலிகணேசன்

No comments:

Post a Comment

சோற்றுக்கடைபுராணம் தொடர் - ft. சத்யா டீ ஸ்டால்

  ஒரு டீக்கடை சோற்றுக்கடை ஆகுமா? புராணத்தில் இடம் பெறுமளவிற்கு என்ன சிறப்பு? சேரன்மகாதேவியில் பாபநாசம் சாலையில் அமைந்துள்ள ஒரு கீற்றுக் கொட...